செய்யார், ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் 11.8.2024 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இருதய மருத்துவ முகாம் சிறப் பாக நடைபெற்றது.
காலை 9 மணிக்குத் துவங்கிய மருத்துவ முகாம் நண்பகல் 1:30 மணி வரை நடைபெற்றது. முகாமில் 120 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனை இலவசமாக எடுக்கப்பட்டது. இருதய மருத்துவ நிபுணர்கள் நெ.பரத்குரு, டி.தியானேஸ்வர், நெ.விஜயலட்சுமி, அ.ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவ சிகிச்சையை வழங்கினர். வேல்.சோம சுந்தரம் நூற்றாண்டு விழா குழு மற்றும் சென்னை பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து இந்த இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.
அனைத்து ஏற்பாடுகளையும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோம.நெடுமாறன், பிரசாந்த் மருத்துவமனையின் மேலாளர் தேவசகாயம், தினேஷ் மற்றும் செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் ஆகியோர் செய்திருந்தனர். பிற்பகல் மருத்துவ குழுவினர்களுக்கு அசைவ உணவு வழங்கி சிறப்பித்தனர்.