சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு

1 Min Read

சென்னை, ஆக.13 புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,479 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது.

புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கன அடியாக சரிந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.456 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 40.11%, புழல் 75.12%, பூண்டி 4-3.%, சோழவரம் 8.69%, கண்ணன்கோட்டை – 62.2% நீர்இருப்பு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *