சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.13 புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,479 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது.

புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கன அடியாக சரிந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.456 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 40.11%, புழல் 75.12%, பூண்டி 4-3.%, சோழவரம் 8.69%, கண்ணன்கோட்டை – 62.2% நீர்இருப்பு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *