மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவு

viduthalai
1 Min Read

சேலம், ஆக. 12- தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப் படுகிறது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், டெல்டா மாவட்ட விவசாயத்தின் ஜீவா தாரமாக உள்ளது.

கருநாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர், சுரங்க மின் நிலையம் உள்ளிட்ட 3 இடங்கள் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து வரும் தொடர் நீர்வரத்து காரணமாக மீண்டும் மேட் டூர் அணை நிரம்பியது.

இதனையடுத்து சுரங்க மின் நிலையம் மூலம் 21,500 கனஅடியும், உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு – கருநாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடது கரை வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *