தமிழர் தலைவரின் நட்புக்குரியவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை தலைவரும், “தமிழ்ச் சுரங்கம்” – நிறுவனர், ” கலைமாமணி” பேராசிரியர் (ஆத்தங்குடி – காரைக்குடி) ஆறு.அழகப்பனார், சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்தார். அவரின் 87ஆம் அகவையையொட்டி ஆசிரியர் பயனாடை அணிவித்தார். அவர் “தந்தை பெரியார்” படம் ஒன்றை பரிசாக ஆசிரியரிடம் வழங்கினார் (சென்னை, 10.8.2024)