திருச்செந்தூர் முருகன் என்ன செய்கிறான்? அலைகளில் சிக்கி மூன்று பக்தர்கள் கால் முறிவு

1 Min Read

திருச்செந்தூர், ஆக.12- திருச் செந்தூரில் நேற்று (11.8.2024) கடல் சீற்றமாக காணப்பட்டது. அப்போது எழுந்த ராட்சத அலை யில் சிக்கி பக்தர் களுக்கு கால் முறிந்தது.

நேற்று பகலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் பகுதியில் அலையின் சீற்றம் சற்று அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் நீராடினர். சேலத்தை சேர்ந்த தங்கம் (வயது 52), புதுக்கோட்டையை சேர்ந்த பாகம்பிரியா (39). கோவையை சேர்ந்த வெங்கடேசன் (56) ஆகியோரும் தங்களது குடும்பத்தினருடன் கடலில் நீராடினார்கள். அப்போது, திடீரென்று எழுந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் களின் காலில் எலும்பு முறிவு ஏற் பட்டதுடன் தண்ணீரிலும் இழுத்து செல்லப்பட்டனர். இதனை கண்டதும் அங்கு கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், ஆறுமுக நயினார். இசக் கிமுத்து, ராமர் ஆகியோர் ஓடி வந்தனர். கடலுக்குள் இறங்கி 3பேரையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *