வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தகவல்

1 Min Read

நாகப்பட்டினம், ஆக.12 வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
வக்பு வாரிய சட்டத் திருத்தம் என்பது அச்சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடியது. கடந்த காலங்களில் கோயில்களுக்கும், தர்காக்களுக்கும் அரசர்கள் பலரும் நிலங்கள், செல்வங் களை வழங்கியுள்ளனர். அதேபோன்று கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தற்போ தும் அரசு நிதி வழங்குகிறது.

வக்பு வாரிய சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல. சட்டத் திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முஸ்லிம் லீக் எம்.பி.க்களுக்கு இடமளிக்கவில்லை. வக்புவாரியமே இல்லாமல் ஆக்குவதற்கான சட்டம் இது. இந்தியாவில் முஸ்லிம்கள் வாழக் கூடாது என நினைக்கிறார்கள். எனவே, வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *