நீலமலை, ஆக. 12- நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 11.8.2024 அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜீவா முன்னிலையில் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது.
நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வாசுதேவன் 38 ஆண்டுகள் களப்பணி ஆற்றி ஆரணி செல்வதால் அங்கு கழகப் பணி சிறப் பாக செய்ய இக்கூட்டம் வாழ்த்துகிறது.
மருத்துவர் கவுதமன் அவர்களின் பவழ விழாவிற்கு அனைவரும் சென்னைக்கு செல்ல இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மூடநம்பிக்கைக்கு எதிராகவும். பெண்ணு ரிமை பாதுகாக்கவும் தெருமுனை கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.