குட்கா வழக்கு : 8 அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை – ஒன்றிய அரசு அனுமதி அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் அதிர்ச்சி

2 Min Read

புதுடில்லி,ஆக.12 – குட்கா முறைகேடு தொடர்பாக 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பதாகக் கடிதம் ஒன்றை மூடி முத்திரையிடப்பட்ட உறை யில் சிபிஅய் நீதிமன்றத் தில் சிபிஅய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்கு களில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற் கப்பட் டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மேனாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் காவல் துறை அதிகாரிகள், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஅய் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. அந்த குற்றப் பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஅய் சிறப்பு நீதிமன் றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ் நாட்டின்  மேனாள் அமைச்சர்கள், காவல்துறை மேனாள் அதிகாரிகள், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் ஆகியோ ருக்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய அரசு மற்றும் ஊழல் கண்கா ணிப்பு ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டி ருந்தது. இது தொடர் பான வழக்கின் விசா ரணை தள்ளி வைக்கப் பட்ட நிலையில் இந்த வழக்கில் சிபிஅய் நீதி மன்ற நீதிபதி முன்பு நேற்று (11.8.2023) மீண் டும் விசாரணைக்கு வந்தது. அதில் தற்பொழுது 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி அளித் திருப்பதாக மூடிய உறையுடன் கூடிய கடிதத்தை சிபிஅய் தரப்பில் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *