கோவையைச் சேர்ந்தவர் கோவையிலிருந்து – அபுதாபிக்கு முதல் விமானத்தை இயக்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோவை, ஆக.11 பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டுகின்றன. தொழில் நகரமான கோவையை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்ெகனவே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிதாக அய்க்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு கோவையில் இருந்து நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இதை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் விமான சேவை வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10.8.2024)அபுதாபி சென்ற முதல் விமானத்தை இயக்கிய விமானி விவேக் கந்தசாமி பயணிகளை வரவேற்று உரையாற்றினார். விமானி விவேக் கந்தசாமி மற்றும் துணை விமானி வினோத் குமார் சந்திரன் ஆகியோர் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக அப்போது தெரிவித்ததோடு தமிழில் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *