வெளியிட்டுள்ளது தினமலர்! ‘காலை 8.45 மணிக்குள் 4.60 கோடி ஓட்டு பதிவானது எப்படி?’ “மக்களவைத் தேர்தல் முறைகேடு” என பிரச்சாரம் செய்ய நிர்மலா கணவர் முடிவு!

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.11- ‘வாய்ஸ் ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில், சென்னையில் 8.8.2024 அன்று ‘2024: திருடப்பட்ட தீர்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம னின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பேசியதாவது:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மொத்தம் பதிவான ஓட்டுக்களை தேர்தல் ஆணை யம் அறிவிக்கவில்லை; சதவீத மாகதான் வெளியிட்டது. தேர்தலுக்கு முன் சிறப்பாக பிரச்சாரம் செய்யக்கூடிய, இரண்டு முதலமைச்சர்களை கைது செய்தனர். பிரதான எதிர்க்கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்த பின், தேர்தல் நியாயமாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது.

ஓட்டுப்பதிவு நடந்த அன்று காலை 7:00 முதல் 8:45 மணிக்குள், குறிப்பிட்ட 79 தொகுதிகளில், 4.60 கோடி ஓட்டுக்கள் பதிவான அரிய நிகழ்வு, இந்த தேர்தலில் நடந்தது.
அந்த தொகுதிகள் தான் பா.ஜ., வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன. இத்தனைக்கும் பின், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது என்று கூறும் போது தான் சந்தேகம் வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரே கட்ட மாக, 39 தொகுதிகளில் தேர்தல் நடந்ததில், பா.ஜ., ஓட்டு சதவீ தத்தை அதிகரித்துள்ளனர். ஆனால், வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டை விட குறைந்த தொகுதிகள் உடைய ராஜஸ் தான், கருநாடகா, ம.பி., ஜார்க் கண்ட் போன்ற மாநிலங்களில், இரண்டு கட்டம், நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப் பட்டுள்ளது.
இது ஏன் என்பது தான் கேள்வி. இதனை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

இந்த மாதிரியான தேர்தல் சந்தேகம் குறித்த கேள்வி களுக்கு விளக்கம் கேட்டு, லட்சக் கணக்கான அஞ்சல் கார்டுகளை குடியரசுத் தலைவருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் கார்டுகளின் மூட்டைக ளால், குடியரசுத் தலைவர் மாளிகை நிரம்பி வழிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *