சென்னை,ஆக.11- மீனம்பாக்கம் விமான நிலை யத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அதிகாரி கள் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர். சென்னை யில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத் தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் –- விம்கோ நகர், சென்ட்ரல் –- பரங்கிமலை ஆகிய 2 வழித் தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.
அதில் 3ஆவது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4ஆவது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி வரையிலும், 5ஆவது வழித் தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்தப் பணிகளை 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குரோம்பேட்டை, குன்றத் தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை செல்லும் புதிய வழித் தடத்திற்கான, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக் கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த புதிய வழித் தடத்திற்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்கள் வழியாக செல்ல ஆய்வுகள் நடைபெறுகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் குரோம் பேட்டை வழியாக பூவிருந்தவல்லி வரை கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம் தோராய மாக 15 கிலோ மீட்டரை உள்ளடக்கியது.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை, பூவிருந்தவல்லியில் இருந்து திருமழிசை மற்றும் சிறீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள
ஆர்.வி.அசோசியேட் நிறுவனத் திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத் திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன்அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், ஒட்டு மொத்தமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித் தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கையும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வறிக்கையும் என இரு பணிகளும் வருகின்ற நவம்பர் மாதத்திற்கு உள்ளாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமானத்திற்கு சென்றடையும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் என்ற அடிப்படையில் மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்படும் நிலையில் இந்த புதிய வழித் தடத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் நான்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையமும் அமைக்கப் பட உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
* மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* விரைவாக செல்ல முடியும்.
பாரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், பயணிகள் மீனம்பாக் கத்தில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் குறைந்த நேரத்திற்குள் அங்கு செல்ல முடியும்.
தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை வழியாக பூவிருந்தவல்லி வரை சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) ஏற்கனவே பூவிருந்தவல்லியில் இருந்து பாரந்தூர் விமான நிலையம் வரை 43.63 கிமீ நீட்டிப்புப் பாதையைத் திட்டமிட்டுள்ளது, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த 2 விமான நிலையங் களும் இணைக்கப்படும்போது, மீனம்பாக்கத்திலிருந்து பரந் தூருக்குச் செல்லும் விமானப் பயணிகள் பூவிருந்தவல்லி மெட்ரோ வில் உள்ள பிளாட்பார்ம்களை மாற்றிக் கொள்ள வேண்டியி ருக்கும்.
அவர்கள் கட்டம்-1 நிலையங் களில் ஏதேனும் ஒரு ரயிலில் ஏறி பரந்தூர் விமான நிலையத்திற்குச் செல்லலாம். இரண்டு விமான நிலையங்களையும் இணைக்கும் பாதை அவசியம் என்பதால் விமான நிலைய மெட்ரோ-பூவிருந்தவல்லி வழித்தடத்திற்கான டிபிஆர் தேவையில்லை, என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.