ஈரோடு புத்தகத் திருவிழா-2024 திருச்சி சிவா எம்.பி., சிறப்பு சொற்பொழிவு

1 Min Read

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் விழாவில் நேற்று (10.8.2024)) மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ‘எது நிரந்தரம்?’ என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் க.கார்த்திகேயன் ‘நான் ஏன் வாசிக்கிறேன்?’ என்ற தலைப்பிலும் சிறப்புச் சொற்பொழிவாற்றினர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு தொகுதி எம்.பி., கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *