ஈரோடு புத்தகத் திருவிழா-2024 திருச்சி சிவா எம்.பி., சிறப்பு சொற்பொழிவு

Viduthalai
1 Min Read

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் விழாவில் நேற்று (10.8.2024)) மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ‘எது நிரந்தரம்?’ என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் க.கார்த்திகேயன் ‘நான் ஏன் வாசிக்கிறேன்?’ என்ற தலைப்பிலும் சிறப்புச் சொற்பொழிவாற்றினர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு தொகுதி எம்.பி., கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *