புதன்கிழமைதோறும் குறை தீர் மனுக்களை நேரடியாக பெறுவேன் மாநகரக் காவல் ஆணையர் அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஆக.11 புதன்கிழமைதோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது மக்களிடமிருந்து குறை தீர் மனுக்களை சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட் டங்களில் காவல் உயர் அதிகாரிகள் குறை தீர் முகாம்களை நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஏற்ெகனவே ஆணையிட்டுள்ளார்.அதன்படி சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார் மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் இதர காவல் உயரதிகாரிகள் அலுவலகங்களில் பெறப்படும் அனைத்து புகார்களையும் பரிசீ லித்து உரிய சட்ட நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையாளர் அருண், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து குறை தீர் மனுக்களை நேரில் பெறவுள்ளார்.

இதர வார நாட் களான, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காவல் கூடுதல் ஆணையாளர் அளவிலான உயரதிகாரி களும், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துணை ஆணையாளர் அளவிலான காவல் அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெறுவார்கள். எனவே, சென்னை காவல் எல் லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல் படும் பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவில் காவல் உயரதிகாரிகளிடம் புகார் மனுக்களை சமர்ப் பிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *