35 மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்

Viduthalai
1 Min Read

ராமேஸ்வரம், ஆக. 11- இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று (10.8.2024) முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஆக.8இல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பனில் இருந்து சூசை, சார்லஸ், ரஞ்சன், அலெக்ஸ் ஆகியோரது நாட்டுப்படகில் 35 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். இவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர்.

இதனைக் கண்டித்து நேற்று (10.8.2024) பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற் றும் படகுகளை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *