கழகப் பொதுக்குழு தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் தொடங்கியது

1 Min Read

கன்னியாகுமரி, ஆக.11- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
பகுத்தறிவு விழிப்பு ணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார்.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், கழக மாவட்ட கலை இலக்கிய அணிச்செயலாளர் பா.பொன்னுராசன், நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.இராஜசேகர், மாவட்ட கழக தோவாளை ஒன்றிய செயலாளர் வீராணமங்கலம் மா. ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் ஆரல்வாய் மொழி ம.தமிழ்மதி, சுசீந்திரம் அரிஷ், கோட் டாறு பகுதி கிளைக்கழக தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்சு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பு சிந்தனைகள், தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத் துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்து அறிவுத் தெளிவு பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *