தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் – தமிழ்நாடு மீனவர்கள் காயம்!

Viduthalai
1 Min Read

நாகப்பட்டினம், ஆக.11 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைg் கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கைg் கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களைத் தாக்கி இலங்கைக் கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வு மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *