செயலி மூலம்தான் இனி விடுப்பு எடுக்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை!

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.10- அரசு ஊழியர் களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வித மாக இனி விடுப்பு எடுத்தால் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் முறை:

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என மொத்தம் 9 லட் சத்து 48 ஆயிரத்து 522 மாநில அரசு ஊழியர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சர்வீஸ் பைல்கள்” ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அரசு ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகள், ஊதிய விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அதற்காக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறைசார்பாக ‘களஞ்சியம்’ என்ற செயலி வடி வமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தான் இனி விடுப்பு எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

விடுப்பு – முன்பணம்

இதுதொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறைரீதியாக அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது அலைபேசியில் களஞ்சியம் செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் சுயவிவரம், விடுமுறை, ஊதிய விவரம், பணி அறிக்கை ஆகியவற்றை சரி பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும் இனிவரும் காலங் களில் விடுப்பு எடுப்பவர்கள் இந்த களஞ்சியம் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப் பிக்க வேண்டும்.

மேலும் முன்பணங்கள் சம்பந்தமாக அதாவது விழாக்கள் முன்பணம், குறுகிய கால முன் பணம் போன்ற முன்பணம் விண்ணப்பங்கள் களஞ்சியம் செயலியின் மூலம் தான் விண்ணப் பிக்க வேண்டும்.

அதில் ஏற்கெனவே எடுத்த விடுப்புகளை நேவிகேஷன் பாத் பயன்படுத்தி பதிவிட்டு ஏற்பளிக்க வேண்டும். அப்போதுதான் விடுப்பு விவரங்கள் முழுமையாக பதியப்படும்.

-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *