போக்குவரத்து கழகத்தில் வருகைப் பதிவேடு கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Viduthalai
2 Min Read

அரசியல், தமிழ்நாடு

மதுரை, ஆக. 12 –  அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டாயம் புத்தக வடிவிலான வருகைப் பதி வேடு பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் எஸ்.ஜெ.எஸ்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் 2016-இல் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண் டலத்தில் 12 கிளைகளில் ஆயிரம் பேருந்துகள், 2 ஆயிரம் ஓட்டுநர் கள், நடத்துனர்கள் மற்றும் 5 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். 

இந்த கிளைகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு வருகை பதி வேடு வைப்பதில்லை. ஓட்டுநர்கள், நடத்துனர்களால் தங்களது வரு கையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் தொழிற்சங்க நடவடிக் கையில் ஈடுபடும் ஓட்டுநர், நடத் துனர்கள் பணிக்கு வந்தாலும் அவர்கள் பணிக்கு வரவில்லை என அதிகாரிகளே குறித்துக் கொண்டு பல்வேறு வழிகளில் தண்டிக்கின் றனர்.

இதனால் அனைத்து கிளைகளி லும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அச்சிடப்பட்ட வருகை பதிவேடு வைக்குமாறு 2016இல் மனு அளித் தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு போக்கு வரத்து கழகத்தின் அனைத்து கிளை களிலும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அச்சிடப்பட்ட வருகை பதிவேடு வைக்க உத்தரவிட வேண்டும்” இவ் வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2019 முதல் பயோ மெட்ரிக் வரு கைப் பதிவேடு முறை பின்பற்றப் படுகிறது. தற்போது புத்தக வடி விலான வருகை பதிவேடு பயன் பாட்டில் இல்லை எனத் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் தொழில் நிறு வனங்களில் வருகை பதிவேடு முறை பின்பற்ற வேண்டும். இதை தொழிலாளர் ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட் டுள்ளது. அதே நேரத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற் போது புத்தக வருகைப் பதிவேடு முறை இல்லை, 2019 முதல் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பயன் படுத்தப்படுவதாக கூறப்பட்டுள் ளது. பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை இருந்தாலும் புத்தக வருகை பதிவேடும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் மனு தாரர் தரப்பில் குற்றச்சாட்டு உறுதியாகிவிடும். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஓட்டு நர், நடத்துநர்கள் பணிக்கு வந் தாலும் அவர்கள் பணிக்கு வர வில்லை என குறிப்பிட்டு தண் டிப்பது என்பதை ஏற்க முடியாது. இதனால் அரசுப் போக்குவரத்து கழக அனைத்து கிளைகளிலும் புத்தக வடிவிலான வருகை பதிவு முறையை பின்பற்ற வேண்டும். இதை தொழிலாளர் ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *