தருமபுரி, ஆக.10 தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைக்கு குருதி தேவைப்பட்டதால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குருதிக்கொடை இயக்கத்தின் சார்பில் உடனடியாக குருதி சேவை வழங்க ஒருங்கிணைப்பாளர் மா.செல்லதுரை மற்றும் கண்.இராமச்சந்திரன் நகர இளைஞரணி அமைப்பாளர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று தங்களின் குருதியை வழங்கி சேவை புரிந்தனர். உடன் குருதிக்கொடை இயக்கத்தின் செயலாளர் த.மு.யாழ்திலீபன்.
இரு தோழர்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குருதிக்கொடை இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம் – மகிழ்கிறோம்.
குருதிக்கொடை வழங்கிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!

Leave a Comment