ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மணிப்பூர் தீப்பற்றி எரியும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது, கேலி செய்வது அழகல்ல என ராகுல்காந்தி கண்டனம்.

* தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் மசோதாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலக்கி யிருப்பது ஜனநாயக மரபுக்கு எதிரானது என்கிறது தலை யங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* இந்திய குற்றச் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் அறிமுகம். பெயர்கள் ஹிந்தியில் மாற்றப் பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்.

தி டெலிகிராப்:

* புதிய அய்பிசி, சிஆர்பிசி மற்றும் எவிடன்ஸ் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்திருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 348 பிரிவிற்கு எதிரானது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 2012 இல் அத்வானியின் முன்மொழிவுக்கு எதிராக தற்போது மோடி அரசு தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மசோதா அறிமுகப்படுத்தியுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *