கள்ளக்குறிச்சி கழக மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாராட்டு

1 Min Read

கள்ளக்குறிச்சி, ஆக. 10- கடந்த பிப்ரவரி மாதத்தில் இணைய வழியில் பெரியார் 1000 வினாடி வினாத் தேர்வு,கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் மேட்டை உள்பட பல பள்ளிகளில் நடத்தப்பட்டது.
5.08.2024 அன்று இப்பள்ளியில் தேர்வு எழுதியஅனைத்து மாணவி களையும் ஊக்குவிக்கும் வகையில்,பேனாக்கள் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், பள்ளித் தலைமை ஆசிரியர் மணிமேகலை, பள்ளி யின் மேனாள் முது கலை பட்டதாரி தாவரவியல் ஆசிரியர் அரிமா சம்பத்,கழகப் பொறுப்பாளர்கள் மு.இளங்கோவன், சி.அய் யனார், பா.சக்தி, வை. சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசினர் உயர்நிலைப் பள்ளி முருக்கம்பாடி, கல்லக்குறிச்சி மாவட்டம்.
கல்லகுறிச்சி மாவட்டம் முருக்கம்பாடி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் மாலு, கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *