“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 Min Read

அரசியல்

சென்னை,ஆக. 12 – பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூ கத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப் பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று தரும புரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

 முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அதன் தொடர்ச்சியாக 2ஆ-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கியது.

இந்த முகாம் 16.8.2023 வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறுபவர்கள் வரும் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய 4 நாட்களில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *