வினேஷ் போகத்

viduthalai
1 Min Read

9 வயதில் தந்தையோடு வயலில் வேலை செய்துகொண்டு இருந்த போது அவரது தந்தை சொத்து தகராறு காரணமாக ஊர் தலைவரின் அடியாட்களால் கொல்லப்பட்டார். கண்முன்னே தந்தை உடல் வயலில் கிடக்க கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை யாருமே இல்லாத நிலையில் அழுதுகொண்டே தனது தாயிடம் சென்று தந்தை கொல்லப்பட்ட விவரத்தைக் கூறி கதறி அழுதார்.

அன்றைய அவரது வலிதான் 6 முறை உலக வாகையர் பதக்கம் வென்ற ஜப்பானிய வீராங்கனையை 5.0 என்ற புள்ளியில் தோற்கடித்து தங்கத்திற்கான தனது பயணத்தை வெற்றிகரமாகத் துவங்கினார். ஆனால், அந்தப் பயணத்தில் அரசியல் புகுந்துகொண்டது. சிலரது ஈகோ அந்தப் பயணத்தை முடிக்க சூது செய்தது.

ஆகையால்தான், 31 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விளையாட்டின் ஓய்வை அறிவிக்கும் போது தனது தாய்க்கு இவ்வாறு செய்தி அனுப்புகிறார்.

“அம்மா நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவை நிறைவேற்ற முடியாத நிலையில் எனது உள்ள உறுதி உடைந்து போய்விட்டது. எதிர்த்து நிற்கும் சக்தியை முழுவதும் இழந்துவிட்டேன். சென்றுவருகிறேன் மல்யுத்தமே 2001-2024 நான் என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். மன்னித்துவிடுங்கள்!” என்று அரியானி மொழியில் எழுதி இருக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *