(வினேஷ் போகத் – சாந்தி) கலைஞரின் பாராட்டு!

1 Min Read

இன்று கலைஞர் இருந்திருந்தால்… வினேஷ் போகத்திற்கு தங்கம் வென்றது போன்ற பெருமையை செய்திருப்பார்!
தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; வழங்கியவர் தலைவர் கலைஞர்.

இந்த பரிசு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான், பாலின சோதனையில் சாந்தி தோல்வியுற்று, அவரின் பதக்கம் பறிக்கப்படப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மிகவும் வேதனையில் இருந்தார். பன்னாட்டு அளவில் பதக்கம் பெறுவது என்பது கிட்டத்தட்ட உயிரைக்கொடுத்து விளையாடி வெற்றி பெறுவது போன்றது. ஆனால் மனித நேயமற்ற சிலரால் அவரது பாலினம் தொடர்பான விவாதம் எழுப்பப்பட்டு அவரது எதிர்காலமே இருண்டு போகவைத்தனர். ஆனால் கலைஞர் அந்த வேதனையை உணர்ந்தார்.

கலைஞர் நடந்துகொண்டிருந்த விவாதங்கள் பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை. “ஓடியது இந்தக் கால்கள் தானே – உனது உழைப்பிற்கானது – உனக்கானது என்று கூறி ரூ.15 லட்சம் பரிசைப் பெற, முழுத் தகுதி உனக்கு உண்டு” என்று கூறி காசோலையை கொடுத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *