அரசியலால் – பெறவிருந்த ஒரு தங்கத்தையும் இழந்துள்ளது இந்தியா.
பாரிஸ் – ஒலிம்பிக்கில் நடந்து வரும் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் தாக்கம்.இந்தியாவில் பலருக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.
வினேஷ் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால், 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது சக வீரரான அந்திம் பங்கால் 53 கிலோ எடைப் பிரிவில் தனது முதல் சுற்று போட்டியில் தோல்வி அடைந்தார் அந்திம். 6.8.2024 அன்று இரவு முதல் பட்டினி கிடந்தபோதிலும், 7.8.2024 அன்று காலை முதல் எடை குறைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் 200 கிராம் அதிக எடை இருந்ததால் அவரால் போராடி வெற்றி பெறமுடியவில்லை என்கிறது ஆங்கில நாளிதழ் ஒன்று.
2017ஆம் ஆண்டு வீரர்களின் எடை விவகாரத்தில் அலட்சியமாக இருந்த மேனாள் பயிற்சியாளரை ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்ய வைத்த விவகாரம் தற்போது மீண்டும் வெளிக்கொண்டு வரப் பட்டுள்ளது.
மேனாள் வீரர் மற்றும் தேசிய பெண்கள் அணியின் மேனாள் பயிற்சியாளர் கிரிபாஷங்கர் பாடேல் 2017ஆம் ஆண்டில் இதே போன்ற பிரச்சினையை எழுப்பினார்.
அப்போது உலகக் குத்துச்சண்டை சம்மேளனம் (UWW) இரண்டு நாள் எடை குறைப்பு முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், அதன் பின்னர் இந்த கொள்கை மாற்றப்பட்டு இரண்டு நாள் எடை குறைப்பு முறை நீக்கப்பட்டது. இரண்டு நாள் எடை குறைப்பு முறையை செயல்படுத்தாதது ஒரு விஷயம்.
“இதுவரை எந்த எடைப் பிரிவிலும் இரண்டு நாட்கள் போட்டி நடத்தப் படவில்லை. இது போன்ற போட்டிகளை நடத்தாதபோது வீரர்கள் எப்படி அனுபவம் பெறுவார்கள்? அந்த நாட்டு மல்யுத்த சம்மேளனம் பன்னாட்டு விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதே விதிகளை உள்ளூர் போட்டிகளில் செயல்படுத்த வேண்டும் என்றபோது மட்டுமே சாத்தியமாகும்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தேசிய விளை யாட்டுகளை நடத்தினாலும், பெரும்பாலான மல்யுத்தப் போட்டிகளை இந்திய மல்யுத்தச் சம்மேளனம் (WFI) தான் நடத்துகிறது.
உலக வாகையர் பட்டப் போட்டியில் மற்றும் ஒலிம்பிக்கில் மட்டுமே இரண்டு நாள் எடை குறைப்பு கட்டாயமாகும். மற்ற பன்னாட்டுப் போட்டி களில் ஒரு நாளில் ஒரு எடைப்பிரிவு போட்டிகள் முடிக்கப்படும்.
WFI ஆதாரமாக, ஒரு நாளில் ஒரு எடைப்பிரிவு போட்டிகளை நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறுகிறது. “விளை யாட்டுக்களிலும் உலக வாகையர் பட்டப் போட்டி யில் மட்டுமே இரண்டு நாட்கள் எடை குறைப்பு உள்ளது. மற்ற போட்டிகள் வேறுபட்டவை என்பதால், ஒரு நாளில் ஒரு எடைப்பிரிவில் போட்டிகளை நடத்துகிறது.
போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தால், செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும்.” ஒலிம்பிக் மற்றும் உலக வாகையர் பட்டப் போட்டியில் போட்டியிடும் வீரர்கள் இந்த கொள்கையை அறிந்திருப்பதால், அத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் போது அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆளும் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் செலவீனப் பட்டியலைக் காட்டுகிறது. எதன்படி என்றால், மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சையில் இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்த உடனேயே அவரது மருத்துவச் செலவு பட்டியலைக் படித்துக்காட்டுவதைப் போல் உள்ளது.
ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. ஒரு சிலரின் குறுகிய பார்வையின் காரணமாக ஒட்டுமொத்த நாடே ஒரு தங்கத்தை இழந்துள்ளது.
ஏகலைவனிடம் கட்டைவிரலைக் கேட்டார்கள், சகுனியை வைத்து நயவஞ்சகச் சூதாடினார்கள், வாலியை மறைந்திருந்து கொன்றார்கள். சம்புகனின் தலையைக் கொய்தார்கள்.
வினேஷ் போகத்: கண்ணீர், வியர்வை, இரத்தம்! இது வரலாறு.
வினேஷ் போகாத் அரை இறுதிப் போட்டியை வென்ற பிறகு எடை அதிகரித்தது எப்படி?
அவரோடு இருக்கும் உதவியாளர் கொடுத்த ஓ.ஆர்.எஸ். காரணமாக அவரது எடை 52.7 கிலோகிராமுக்கு அதிகரித்தது! இரவில் 2.7 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அவரை முழு இரவும் உடற்பயிற்சி செய்ய வைத்தனர்!
அலட்சியமா, வேண்டுமென்றே செய்யப்பட்டதா?
பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், எடை குறைப்பு பிரச்சனையால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு முழுவதும் தூக்கமின்றி, ஜாகிங், சைக்கிளிங், மற்றும் நீராவிஎன எல்லா வழிகளையும் பயன்படுத்தி எடையை குறைக்க முயற்சித்தார். இறுதியில் தலைமுடியையும், உடற்பயிற்சி உடையையும் துண்டித்த பிறகும் தேவையான எடையை குறைக்க முடியவில்லை. இதனால், இரத்தத்தை எடுத்து எடை குறைக்கலாம் என்ற கடைசி முயற்சியிலும் ஈடுபட்டதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்தார்.
எடை குறைப்புக்கான கடைசி நேரத்தில் 150 கிராம் அதிக எடை இருந்த வினேஷ், கூடுதல் பயிற்சியின் மூலம் 50 கிராம் குறைத்தார். ஆனால், இறுதி 100 கிராமை குறைக்க அவருக்கு நேரம் இல்லை. இந்திய குழு கூடுதல் நேரத்தை வலுவாக கேட்கவில்லை எடையை குறைக்க முடியாததை உணர்ந்த வினேஷ் கதறி அழுதார். அவரது முழு அணிக்கும் இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
வினேஷ் போகத், 6.8.2024 அன்று நடந்த மூன்று போட்டிகளுக்குப் பிறகு நீர்ச்சத்து இழப்பதைத் தவிர்க்க சிறிதளவு தண்ணீர் கொடுக்கப்பட்டதாக இந்திய அணியின் தலைமை மருத்துவர் டாக்டர் தின்ஷா பர்திவாலா கூறினார்.
6.8.2024 அன்று போட்டிகளுக்குப் பிறகு வினேஷ் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தினார். முதலில், அவரது அணி நேரத்திற்கு எதிராக ஒரு போட்டியில் இருப்பதை அறிந்திருந்தாலும், விஷயங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றியது. பாரிசில் நள்ளிரவுக்குப் பிறகு, அவரை வியர்க்க வைக்கும் தீவிர நடவடிக்கைகள் தொடங்கின. அவர் முழு இரவும் விழித்திருந்தார். வினேஷ் முரட்டு கம்பளி ஆடையை அணிந்து ஓட்டப் பயிர்சி செய்தார். பிறகு நீராவி அறைக்குள் நுழைந்து அங்கும் கடுமையான் உடற்பயிற்சி செய்தார்.
“பொதுவாக போட்டி வீரர்கள் தங்கள் இயற்கையான எடையை விட குறைவான எடை வகையில் பங்கேற்பார்கள். அவர்கள் குறைவான வலிமையான எதிரிகளுடன் போராடுவதால் இது அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறது.
எடை குறைப்பு செயல்முறை என்பது உணவு மற்றும் தண்ணீரை கணக்கிட்டு கட்டுப்படுத்துதல் மற்றும் காலையில் எடை பரிசோதனை வரை பயிற்சிகள் மற்றும் வியர்வை வெளியேற்றும் செயல் முறையாகும்” என்று அவர் விளக்கினார்.