தகுதி – திறமை – மோசடி! “கல்வி – கேள்வியை சூத்திரர்களுக்கு வழங்காதே” என்று கூறுவது எதற்கு தெரியுமா?

1 Min Read

குருவே, “நீங்கள் எனக்கு நேரடியாக வில் வித்தை பயிற்சி அளித்தீர்கள்.
ஆனால், ஏகலைவன் உங்களை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை கற்றான்.
அப்படி இருந்தும் அவன் எப்படி என்னைவிட சிறந்த வில்வித்தை வீரனாக இருக்கிறான்?” என்று துரோணரிடம் ஒருமுறை அர்ஜுனன் கேட்டான்.

உடனே துரோணர், “அதோ அந்த மரத்தில் இருந்து ஓர் இலையை உன் அம்பு மூலம் வீழ்த்து” என்றார். உடனே அவன் இலையை வீழ்த்தினான்.

“அம்பு விடும்போது உன் கண்ணுக்கு என்ன தெரிந்தது?” என்று குரு கேட்டார்.

“உங்கள் கட்டளையும் அந்த மரத்தின் இலையும் தெரிந்தது” என்று அர்ஜுனன் சொன்னான்.

துரோணர் உடனே ஏகலைவனை அழைத்து, “அதோ அந்த மரத்திலிருந்து ஓர் இலையை வீழ்த்து” என்றார். அவனும் அவ்வாறே செய்தான்.

அவனிடமும், “நீ அம்பு விடும்போது உன் கண்ணுக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டார்.

“இலையின் காம்பும், என் அம்பின் நுனியும் மட்டும்தான் தெரிந்தது” என்றான்.
உடனே துரோணாச்சாரியார் அர்ஜுனனிடம், “இப்போது புரிந்ததா? ஏன் அவன் உன்னைவிட சிறந்த வில் வித்தை வீரனாக இருக்கிறான் என்று” சிரித்தபடி சொன்னார்.

அர்ஜுனன் தலை குனிந்தான்.

அந்தக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *