தனக்கென வாழா வீரத் தியாகி வ.உ.சி. நினைவு நாள் இன்று! அவர் விரும்பிய சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்போம்!

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

ஆசிரியர் அறிக்கை

  தனக்கென வாழா வீரத் தியாகி வ.உ.சி. நினைவு நாள் இன்று! அவர் விரும்பிய சமூகநீதியை  உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (18.11.2023) ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும், ‘சிறையிலே செக்கிழுத்தத் தியாகச் செம்மல்’ என்றும் போற்றப்படும் ஒப்பாரும் மிக்காருமில்லாத தன்னல மறுப்பாளர் – சமூகநீதிக்காக கடைசிவரை வாதாடிய வரும், தந்தை பெரியார் அவர்களே தமது போற்று தலுக்குரியவர் என்று மனந்திறந்து பாராட்ட, இறுதியில் சமூகநீதிப் போராளியாகவே குரல் கொடுத்த தொண்டறச் செம்மல் – நாட்டிற்கும், சமுதாய மேம் பாட்டிற்கும் தன்னையும், குடும்ப நலத்தையும் துறந்து, ‘மெழுகுவத்தியாக’ எரிந்து ஒளிகாட்டி வரலாற்றில் வாழும் மேதை வ.உ.சி. அவர்களது 87 ஆவது நினைவு நாள் இன்று!

வரலாறு உள்ள வரை அவர் வாழ்வார்! ‘தனக்கென வாழா பிறர்க்குரியாளர்’ என்ற சொற்றொடரின் ஒவ்வொரு எழுத் துக்கும், முழுப்பொரு ளுக்கும் ஒளி தரும் தொண்டறச் செம்மல் அவர்!

அவர்கள் நினை வைப்போற்றி, அவர் விரும்பிய சமூகநீதியை முழுமையாக அடைய உறுதி ஏற்று, உழைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
18.11.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *