வெறுப்பு கக்கும் பேச்சுகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

1 Min Read

புதுடில்லி, ஆக. 12- வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அரியானா உட்பட சில மாநிலங்களில் சமீ பத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். குறிப் பிட்ட பிரிவைச் சேர்ந்த வர்களை கொல்ல வேண் டும் என்றும் அவர்களை சமூக ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் புறக் கணிக்க வேண்டும் என் றும் பொதுக் கூட்டங்க ளில் பேசப்பட்டன. இச் சம்பவங்களை தடுக்க ஒன்றிய, மாநில அரசுக ளுக்கு உத்தரவிட கோரி பத்திரிகையாளர் ஷகீன் அப்துல்லா உச்சநீதிமன் றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை நீதி பதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடு தல் சொலிசிடர் ஜெனரல் நட்ராஜிடம், வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆராய ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் குழு ஒன்றை அமைக்க வேண் டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

அதன்பின் நீதிபதிகள் கூறுகையில், ‘‘அனைத்து சமுதாயத்தினர் இடையே மதநல்லிணக் கம் இருக்கவேண்டும். அனைத்து சமுதாயத்தின ரும் பொறுப்புடன் இருக்க வேண்டும். வெறுப்பு பேச்சு நல்லதல்ல. இதை யாரும் ஏற்க முடியாது’’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *