கருநாடக மாநில உள்துறை அமைச்சரும், மேனாள் துணை முதலமைச்சருமான பரமேஸ்வராவின் பிறந்த நாள் விழாவில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்பொழுது தந்தை பெரியாரின் சிலையை பரிசாக அளித்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘தாட்ஸ் ஆப் பெரியார்’ என்கிற புத்தகத்தையும் வழங்கினார். உடன் அண்ணா திமுக மாநில செயலாளர் குமார். நிர்வாகிகள் ரவி, மோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தந்தை பெரியார் புகழினை எப்பொழுதும் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் சிலையையும் புத்தகத்தையும் பெற்றுக் கொண்ட உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நன்றியையும் மகிழ்ச்சியையும் புகழேந்தி அவர்களுக்கு தெரிவித்தார்.
கருநாடக மாநில உள்துறை அமைச்சரின் பிறந்த நாள் தந்தை பெரியார் சிலையை புகழேந்தி வழங்கினார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books