புதுடில்லி, ஆக.9- கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் நாடாளுமன்ற வருகை பதிவேடு மற்றும் நாடாளுமன்ற டி.வி.யில் எம்.பி.க்களின் பெயரை குறிப்பிடும் போது எஸ்.சி., எஸ்.டி. என்று அடைப்பு குறிக்குள் பதிவிடுவதை தவிர்க்க வலியுறுத்தினர்.