விவசாயிகளுக்கு ரூ.5,400 மானியம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.9 தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உணவு மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5,400 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கு ஆதார் கார்டு, வங்கி புத்தகம், நிலச் சான்றிதழ், சிட்டா, பட்டா மற்றும் நில வரைபடம் ஆகிய ஆதாரங்கள் வழங்க வேண்டும். திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அடுத்து அடுத்து
மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தமிழ்நாடு

டோக்கியோ, ஆக.9 ஜப்பானின் பல பகுதிகளில் நேற்று (8.8.2024) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஜப்பானின் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனமான NERV வெளியிட்டுள்ள தகவலில், இந்த நிலநடுக்கம் ஹியுகா – நாடா கடலில் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரிக்டர் அளவில் 7.1 என்று சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உணரப்பட்டதால் ஜப்பானின் பல பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது அந்நாட்டு அரசு. மியாசாகி மாகாணத்தில் உள்ள கடலில் நிலநடுக்கம் காரணமாக சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றன.

இதனையடுத்து மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா, எஹிம் போன்ற மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ஜப்பான் அரசு.

இதற்கிடையே, கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய தீவுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாகவும், அங்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *