மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு மீனவர்கள் 109 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 Min Read

ராமநாதபுரம், ஆக.9 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டுப்படகுகளில் 33 மீனவர்கள், கடந்த 6-ஆம் தேதி பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று (8.8.2024) மாலை இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் மீன்பிடித்த இந்த 4 நாட்டுப் படகுகளையும், அதிலிருந்த சகோதரர்களான ஜோன்சன், இன்னாசி மற்றும் கிரீன்சன், ஆரோக்கியம், சேந்திடிக்கல் உள்ளிட்ட 33 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது. படகுகளையும், மீனவர்களையும் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி கடற்படை தளத்துக்கு இலங்கை கடற்படை அழைத்துச் செல்வதாக பாம்பன் மீனவ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 6 பேர் என தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் நேற்று (8.8.2024) மாலை 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதானது ராமேசுவரம் மற்றும் பாம்பன் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடி தடை காலத்துக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 109 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 52 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், 12 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 45 மீனவர்கள் இலங்கை நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனர். இந்நிலையில், மேலும் 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *