காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறப்பு

viduthalai
2 Min Read

மேட்டூர், ஆக.9 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று (8.8.2024) காலை முதல் விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கருநாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 27-ஆம் தேதி 100 அடியை எட்டியது. தொடர்ந்து, அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த ஜூலை 28-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

அன்றைய தினம், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.51 லட்சம் கன அடியாகவும், நீர்மட்டம் 110.76 அடியாகவும், நீர் இருப்பு 79.49 டிஎம்சியாகவும் இருந்தது. பின்னர், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு கடந்த 29-ஆம் தேதி 23,000 கன அடி வரை அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, கடந்த 30-ஆம் தேதி முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து சரிந்தன் காரணமாக, உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. பின்னர்,

டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று (8.8.2024) 21,500 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக குறைக் கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்தன் காரணமாக, விநாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக இருந்த நிலையில் நேற்று (8.8.2024) காலை 12,000 கன அடியாக அதி கரித்துள்ளது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *