சென்னை, ஆக. 8- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS இல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது;-
“அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11ஆம் வகுப்பு பயின்று 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர் களுக்கு ரூபாய் 5000/-சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கென 2022-2023 ஆம் கல்வி யாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 5,16,135 மொத்த மாணவர்களில் முதற்கட்டமாக 4,64,684 மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயின்ற மாவட்டத்தின் பெயர், School Name. School Udise Number, Student EMIS Number, Bank Name, Bank IFSC Code No, Student Account Number, ஆகிய விவரங்கள் EMIS இணையதளத்திலிருந்து பெறப்பட்டு பார்வை 3-இல் காணும் கடி தத்தில் TNPFC-க்கு அனுப் பப்பட்டுள்ளது.
TNPFC-மேலாளரின், கடிதத்தில் EMIS இணையதளத்திலிருந்து பெறப்பட்டுள்ள 4,64,684 மாணவர்களின் விவரங்களில் 59,283 மாணவர்களின் விவரங் கள் மட்டுமே சரியாக உள்ளதாகவும் மீதமுள்ள 4,05,401 மாணவர்களின் வங்கிக் கணக்கு எண், Bank IFSC Code No ஆகிய விவரங்கள் தவறுதலாக உள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆகவே தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாண வர்களின் விவரங்களினை மீண்டும் ஆய்வு செய்து, மாணவர்கள் பயின்ற பள்ளி, School Udise Number. Student EMIS Number. Bank Name, Bank IFSC Code No, Student Account Number, ஆகிய விவரங்களினை இணைப்பில் குறிப்பிடப் பட்டுள்ள EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறி வுறுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.