மீண்டும் வேகமாக பரவி வரும் கரோனா

1 Min Read

நியூயார்க், ஆக.13 – கடந்த ஓராண்டு காலமாக கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.  கடந்த 2019 இறுதியில் பரவத்  தொடங்கிய கரோனா வைரஸ் 2 ஆண்டுகளில் உலகை ஒரு புரட்டு புரட்டி யெடுத்துவிட்டது. இந்த கரோனா அலை யால் 65 லட்சத் திற்கும் அதிகமானோர் பலியாகிய நிலையில், 3 கோடிக்கும் அதிகமானோர் இயல்பு நிலையை இழந்துள்ளனர். பிரிட்டன் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் புதுவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மீண்டும் கரோனா அலையா? என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலையில், கடந்த 28 நாட்களில் (ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை) உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் (1.5மில்லியன்) கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,500 க்கும் மேற்பட்ட உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் கரோனா பரவல் எப்படிஇருக்கும் என எச்சரிக்கை எதுவும் உலக சுகாதார நிறுவனம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *