அண்ணாமலையின் பாதயாத்திரையில் பாஜகவினர் வைத்த பேனர்- சங்கிகளின் சங்கமமாம்

1 Min Read

விளாத்திகுளம், ஆக 13  விளாத்திகுளத்தில் அண்ணாமலை  நடைபயணம் மேற்கொண்ட நிலையில் பாஜ கட்சியினரே ‘சங்கிகளின் சங்கமம்’ என பதாகை வைத்து வரவேற்றனர். 

தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளளார். அவர் நேற்றைய (12.8.2023) நடைபயணத்தை தூத்துக்குடி மாவட் டம், விளாத்திகுளம் அருகே கமலாபுரம் பஞ்சாயத்து, சுப்பிரமணியபுரம் விலக்கில் இருந்து துவங்கினார். இதையொட்டி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் பாஜவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘சங்கிகளின் சங்கமம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே எதிர்க்கட்சியினர் பாஜவினரை சங்கிகள் என்று விமர்சித்து வரும் நிலையில் ‘சங்கிகளின் சங்கமம்’ என்று கட்சியினரே பதாகை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *