நமது அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர், ஆடிட்டர் மு. கந்தசாமி அவர்களின் தந்தையார் முத்துசாமி (வயது 97) நேற்றிரவு (17.11.2023) மறைவுற்றார். தகவலறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (18.11.2023) காலை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி ஆடிட்டர் கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆடிட்டர் அர. இராமச்சந்திரன், அவரது இணையர் வேல்விழி ராமச்சந்திரன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிதி மேலாண்மை அலுவலர் கு. மணி ஆகியோரும் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள்.