நமது அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர், ஆடிட்டர் மு. கந்தசாமி அவர்களின் தந்தையார் முத்துசாமி (வயது 97) நேற்றிரவு (17.11.2023) மறைவுற்றார். தகவலறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (18.11.2023) காலை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி ஆடிட்டர் கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆடிட்டர் அர. இராமச்சந்திரன், அவரது இணையர் வேல்விழி ராமச்சந்திரன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிதி மேலாண்மை அலுவலர் கு. மணி ஆகியோரும் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள்.
ஆடிட்டர் மு. கந்தசாமி தந்தையார் மறைவு தமிழர் தலைவர் இறுதி மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books