சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் விடுதலை

1 Min Read

ராமேசுவரம், ஆக.7 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து ஜூன் 22 அன்று கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மென்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று (6.8.2024) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த

நீதிபதி நளினி சுபாஷ்கரன்
3 விசைப்படகு ஓட்டுநர்களான காளீஸ் வரன், கருப்பையா, ஜெகன் ஆகிய மூவருக்கும் இலங்கை மதிப்பில் தலா 40 லட்சம் வீதம் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்தும் (இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சத்து 50 ஆயிரம்), அபராதத்தை செலுத்தத் தவறினால் தலா ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள 19 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூலை 23 அன்று சிறைப்பிடிக்கப்பட்ட 9 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களுக்கு ஆகஸ்ட் 20 வரையிலும் நீதிமன்ற காவலை நீட்டித்து ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *