புதுடில்லி, ஆக. 7– வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை என்ற மக்களவையில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான கனிமொழி மக்களவையில் நேற்று (6.8.2024) கேள்வி நேரத்தின்போது பயிர்க்காப்பீடு கோரிக்கையை வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
விவசாய பயிர்களுக்கான காப்பீட்டுத்தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என விவசாயிகள் கூறுகிறார்கள். எனது தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையில் விவசாய பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தன. ஏராளமான விவசாயிகள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு 7 மாதங்களாகியும் இன்னும் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. எனவே அதனை உடனே வழங்கவேண்டும்.
அதைப்போல பயிர்க்காப்பீடு செய்தவர்கள் இழப்பீடு பெறும் முறையை எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய அமைச்சர் பதில்
இதற்கு ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பதில் அளித்தார். அப்போது, “பயிர்க்காப்பீடு பிரீமியத்தில் மாநிலங்களும் தங்களது பங்கை சரியான நேரத்தில் செலுத்த வேண் டும்.90சதவீதத்துக்கும்மேலான முறையீடுகளில் இழப்பீடு வழங்குவதற்கான காலதாம தத்துக்கு இதுவும் காரணமாகிறது” என்று கூறினார்.
மீனவர்கள் பிரச்சினை
மேலும் கனிமொழி எம்.பி. மீனவர்களின் பிரச்சினைகளையும் வலியுறுத்தினார்.இது பற்றி அவர் பேசுகையில், “இந்த ஆண்டு மட்டும் 27 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. 177 இந்தியப் படகுகள் தற்போது இலங்கை அரசிடம் இருக்கின்றன. அவை அவர்களுடையதாக உரிமை கொண்டாடப்படுகின்றன.
தூத்துக்குடி தருவைகுளத் தில் 2 படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி யுள்ள னர். 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள னர். ஒன்றிய அரசு மீனவர் விஷயத்தில் கவனம் செலுத் திய பிறகும் இது நடந்திருக் கிறது. எனவே, இந்த பிரச்சி னைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட் டுக்கொண்டார்.