கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

 13.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉மோடி தாழ்வு மனப்பான்மையில் பேசுகிறார். மோடி எனும் பொருள் 2024இல் காலாவதி ஆகி விடும் என உத்தவ் தாக்கரே கருத்து.

👉தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்களை உருவாக்குவதற்காக என்சிஇ ஆர்டி அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட புதிய குழுவில் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் நியமனம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

👉 பாஜகவே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோஷம் இந்தியா முழுவதும் எதிரொலிப்பதாக மம்தா பேச்சு.

👉 நீட் விலக்கு மசோதாவுக்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் பிடிவாதம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉”நீட் தேர்வு என்பது பயிற்சி மய்யங்களுக்கு செல விட்டால் மட்டுமே வெற்றி கிட்டும் என ஆளுநருடன் நடந்த ஆவேசமான விவாதத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவரின் தந்தை சேலம் அம்மாசியப்பன் ராமசாமி பதிலடி. 

தி இந்து:

👉 மக்களவையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத் தப்பட்டதாக நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மணிப்பூர் எம்.பி லோர்ஹோ எஸ்.பி.போஸ் பேட்டி.

தி டெலிகிராப்:

👉 வங்காள கிராமப்புற தேர்தல்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ‘இந்தியா வின் சூப்பர் தேர்தல் ஆணையம்’ போல் செயல்பட முடியாது என உச்சநீதிமன்றம் ஆணையத்திற்கு குட்டு.

👉வாரணாசியில் காந்திய சமூக சேவை அமைப்பின் 12 கட்டடங்களை புல்டோசர்கள் கொண்டு இடித்து யோகி தலைமை யிலான பாஜக அரசு தரைமட்டமாக்கியுள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *