திருவாரூர் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் சவு.சுரேஷ் அவர்களின் மாமியாரும் திருவாரூர் நகர மகளிரணி தலைவி சு. பிரியாவின் தாயாருமான கோ.சுமித்ரா அவர்கள் இன்று (6.8.2024) இயற்கை எய்தினார். அவர்களது இறுதி நிகழ்வு இன்று மாலை 6:00 மணிக்கு பட்டீஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெறுகிறது. அவர்களது கண்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு +91 98946 04570
– – – – –
சென்னை அஸ்தினாபுரம் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் நேற்று (5.8.2024) காலை 11 மணி அளவில் வயது மூப்பு காரணத்தால் காலமானார். சென்னை மாநகராட்சியிலும்/சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திலும் நகரின் கழிவுநீர் உள்கட்டமைப்பு நிர்மாணிப்பில் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் சிறந்த முறையில் செயல் ஆற்றிய மக்கள் நல சுயமரியாதைப் பொறியாளர் ஆவார். சமரசங்கள் அற்ற தொழிற்சங்க செயல்பாட்டாளார் ஆவார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் வீரவணக்கம்.. வீர வணக்கம்..
அன்னாரது இறுதி ஊர்வலம் 204.வெங்கட்ராமன் நகர் 2ஆவது மெயின் ரோடு அஸ்தினாபுரம் சென்னை-64லிருந்து இன்று (6.8.2024) காலை 10 மணியளவில் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.