மறைவு

1 Min Read

திருவாரூர் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் சவு.சுரேஷ் அவர்களின் மாமியாரும் திருவாரூர் நகர மகளிரணி தலைவி சு. பிரியாவின் தாயாருமான கோ.சுமித்ரா அவர்கள் இன்று (6.8.2024) இயற்கை எய்தினார். அவர்களது இறுதி நிகழ்வு இன்று மாலை 6:00 மணிக்கு பட்டீஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெறுகிறது. அவர்களது கண்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு +91 98946 04570

– – – – –

மறைவு

சென்னை அஸ்தினாபுரம் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் நேற்று (5.8.2024) காலை 11 மணி அளவில் வயது மூப்பு காரணத்தால் காலமானார். சென்னை மாநகராட்சியிலும்/சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திலும் நகரின் கழிவுநீர் உள்கட்டமைப்பு நிர்மாணிப்பில் பொறியாளர் அ.பன்னீர்செல்வம் சிறந்த முறையில் செயல் ஆற்றிய மக்கள் நல சுயமரியாதைப் பொறியாளர் ஆவார். சமரசங்கள் அற்ற தொழிற்சங்க செயல்பாட்டாளார் ஆவார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் வீரவணக்கம்.. வீர வணக்கம்..
அன்னாரது இறுதி ஊர்வலம் 204.வெங்கட்ராமன் நகர் 2ஆவது மெயின் ரோடு அஸ்தினாபுரம் சென்னை-64லிருந்து இன்று (6.8.2024) காலை 10 மணியளவில் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *