‘பெல்’ வரதராசன் மறைந்தாரே! கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

1 Min Read

இரங்கல் அறிக்கை

பெரியார் பெருந்தொண்டர் மேனாள் திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர், ‘பெல்’ திராவிடர் தொழிலாளர் சங்க மேனாள் செயலாளர் பெல்.வரதராசன் (வயது 85) இன்று  (18.11.2023) அதிகாலை நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மறை வுற்றார்  – ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம். திருவெறும்பூர் ‘பெல்’ நிறுவனத்தில் பணியாற்றியபோதும், ஓய் வுக்குப் பிறகும் இயக்கப் பணியில் ஆர்வத் துடன் செயல்பட்டவர் பெரியார் பெருந்தொண்டர் வரதராசன் ஆவார். 

அவரது பிரிவால் வருந்தும் அவரது வாழ்விணையர் வ.காந்திமதி மற்றும் மகள்கள் தாமரை நாயகி-ரவி (காவல் துறை, சென்னை), தாமரை செல்வி-குமரவேல் (பொறியாளர், திருச்சி), தாமரை கிருஷ்ணவேனி-மூர்த்தி (குவைத் கேம்ப்) ஆகியோருக்கும் மற்றும் உறவினர்களுக்கும், கழக தோழர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த  இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
18.11.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *