தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

Viduthalai
1 Min Read

திருச்சி, நவ.27 துறையூர் அருகேயுள்ள புத்தனாம் பட்டி நேரு நினைவுக் கல்லூரி நிர்வாகமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து மாநில அளவிலான 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஷியாமளா ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ் மணி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்த ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்: என்சிஎஸ்சி மாநில ஒருங்கிணைப்பாளீர் முனைவர் சுகுமாரன், கல்லூரி தலைவர் பொன்.பால சுப்பிரமணியன், கவிஞர் நந் தலாலா, திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பேராசிரி யர் முனைவர்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பேசினர். நிறைவு நாளில் சிறப்பு அழைப்பாளராகதுறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் பங்கேற்று போட்டிகளில் வெற்றிப் பெற்ற குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கினார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *