சென்னை, ஆக. 5- தாய்ப்பால் ஊட்டுவது தொடா்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச உதவி மய்யத்தை சென்னை சீதாபதி மருத்துவமனை தொடங்கியுள்ளது. அதேபோல, தாய்மார்களுக்கான இலவச ஆதரவு மன்றமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களின் கீழ் புதிதாக பிரசவித்த தாய்மார்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ ஆதரவுகளும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று (4.8.2024) நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் இயக்குநரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான உமா ராம், மகப்பேறு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆலோசகா் ரேகா சுதா்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா். இது தொடா்பாக மருத்துவர் உமா ராம் கூறியது:
தாய்ப்பால், குழந்தைகளுக்கான ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மற்றொருபுறம் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பை தவிர்க்கிறது. அதைக் கருத்தில் கொண்டே இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
அதன்படி, சீதாபதி மருத்துவமனையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இலவச உதவி மய்யத்தை 7305644465 எனும் எண்ணில் தொடா்பு கொண்டு தாய்ப்பால் தொடா்பான சந்தேகங்களுக்கு தீா்வுகள், ஆலோசனைகள், மருத்துவ உதவிகளை பெறலாம்.
வாரத்தின் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் இந்த சேவை வழங்கப்படும்.அதேபோல, ‘தாய்மார் ஆதரவு மன்றம்’ திட்டத்தை பொறுத்தவரை, குழந்தை பிறந்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை பெண்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட உள்ளன.
அதன் கீழ், தாய்ப்பால் ஊட்டும் வழிமுறைகள், உணவளிக்கும் முறைகள், எதிர்காலத்தில் பாலூட்டுதலைப் படிப்படியாக நிறுத்துதல் போன்றவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார் அவா்.