சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அய்ந்து நட்சத்திர விடுதிகளுக்கு உரிமம் ரத்து

viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 4- சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த அய்ந்து தனியார் நட்சத்திர உணவக விடுதிகளின் மதுபானக் கூடங்களின் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதை தவிர்த்து பிரபல தனியார் நட்சத்திர விடுதிகளும் ஏராளமாக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.

இதில் நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், தொழிலதிபர்கள் மது அருந்து வார்கள். இந்தநிலையில் சென்னை யில் இயங்கி வந்த பிரபல நட்சத்திர விடுதியின் பார்களுக்கு தமிழக அரசு திடீரென உரிமத்தை ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையாத் ரீஜென்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஓட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்துள்ளதாகவும், மேலும் மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிய வந்தன.

இதனையடுத்து சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த அய்ந்து நட்சத்திர ஓட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை ஆணை யர் உத்தரவிட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *