சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்கிறார் முதலமைச்சர்
சென்னை,ஆக.14- நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் நாளை (15.8.2023) கொண்டாடப்படு கிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார்.
விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மு.க.ஸ்டாலின், வழங்குகிறார்.
சாதனையாளர்களுக்கு விருது
டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் வழங்கி சிறப்பு செய்கிறார்.
முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத் தளத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு முப்படை அதிகாரிகளை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.
முதலமைச்சர் கொடி ஏற்றுகிறார்
இதன்பின்பு முப்படையினர் மற்றும் காவல் துறை யினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடி யேற்றும். இடத்துக்கு முதல்-அமைச்சர் சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துவார்.
இதன்பின்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக் களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடு களையும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் செய் துள்ளனர்.