சென்னை,ஆக.4 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித் தவர்களுக்கு 500 முதல் 1000 கி.மீ.தொலைவில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதால் ஆயிரக்கணக் கான ரூபாய் செலவு செய்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தேர்வர்கள் தள்ளப் பட்டுள்ளனர்
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறு வனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அதன்படி எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-2025-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உள்பட நாடுமுழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் இத்தேர்வுக்கு விண் ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் தேர்வுக்கு முதல் நாள் இரவு நீட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக ஒன்றிய அரசுஅறிவித்தது. இளநிலை மருத்துவப்படிப்பு களுக்கான நீட் தேர்வில் முறைகேடுகளால் ஏற்பட்ட பெரும்பரபரப்பே நீட் தேர்வு தள்ளிவைப் புக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வு வரும் 11-ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக நடை பெறவுள்ளது. தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மய் யங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் எங்கோஒரு இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த தேர்வு மய்யங் களுக்கு செல்வதற்கு ரயில் களில் பயணச்சீட்டு கிடைப் பதிலும் சிரமம் இருப்பதால்,விமானங்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிக மாக செலவு செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. இதன்படி விமான கட்டணம், தங்குமிடம், உணவு என தேர்வு எழுத செல் பவர்களுக்கு ரூ.30 ஆயிரத் துக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000கி.மீ. தொலைவில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. தேர்வர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட் டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மய்யங்களை ஒதுக்க வேண்டும் என்று தேர்வர் களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வைகோ கண்டனம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (3.8.2024) விடுத்த அறிக்கை யில் கூறி யிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுத உள்ள மாண வர்களுக்கு மன உளைச்சலையும் வீண் அலைச்சலையும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் ஏற்படுத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் மருத்துவ மாணவர்களை தொலை தூரத்தில் உள்ள தேர்வு மய்யங்களுக்கு அனுப்புவது என்பது உள்நோக்கம் கொண் டதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருந்து இனி எவரும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனு மதித்து விடக்கூடாது என்று சில சக்திகள் முயற்சிப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. இதில் ஒன்றிய அரசு உடனடியாக கவனம் செலுத்தி முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அம்மாநிலத் திலேயே தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்து மறு அறி விப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.