கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

4.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல் முறையீடு?
* 2024 பொதுத் தேர்தலில் பாஜக 79 இடங்களை கூடுதலாக பெற்றதற்கு, வாக்கு எண்ணிக்கையில் உள்ள குளறுபடிகள் தான் காரணம், விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு.

தி இந்து:
* ஒன்றிய அரசின் உறுதியற்ற தன்மை மணிப்பூரில் கிளர்ச்சியை மீண்டும் உருவாக்கியுள்ளது: பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி.

தி டெலிகிராப்:
*நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை தேர்வுக் கட்டணத்தில் இருந்து 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி உபரி வருவாய் ஈட்டியுள்ளது: இருப்பினும், வினாத்தாள்களை கொண்டு செல்ல இ-ரிக்சாவை பயன்படுத்தியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:
* அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டில் கணிச மான பகுதி ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமல் போகிறது, இதில் ‘கிரீமிலேயர்’ அதிக இடங்களை கைப்பற்றினார்கள் என்ற வாதம் ஏற்புடையதா? உயர் பதவிகளில் நிரப்பப்படாத பதவிகளின் விகிதம் அதிகரிக்கிறது என்பதையும் தரவு காட்டுகிறது.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *