தருமபுரி, ஆக. 4- அரூர் கழக மாவட்டம் நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
நாவலை ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளி வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு விழா நடைபெற்றது. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று வரிசை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களைப் பாராட்டிப் புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரி சளித்து “பெரியார் அம் பேத்கர் பார்வையில் இன்றைய கல்வியின் தேவை” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
கழக வழக்குரைஞர் துரை அருண் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர்.
மாநிலத் துணை செயலாளர் மா.செல்லதுரை, அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், இளைஞரணி செயலாளர் வினோத், சென்னை சஞ்சய், தருமபுரி நகர இளைஞரணி செயலாளர் அர்ஜுனன், திராவிட மாணவர் கழக வேப் பிலைப்பட்டி தோழர்கள் ப.பெரியார், கு.அரிஅரன், சு. சூர்யா, வெதரம்பட்டி போஸ், அரிஅரன், அஜித் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.